Showing posts with label சாதம். Show all posts
Showing posts with label சாதம். Show all posts
Tuesday, 22 September 2015 | By: Menaga Sathia

பிஸிபேளாபாத் / Bisi Bele Bath (Authentic Recipe) | Lunchbox Recipes

print this page PRINT IT 
இந்த செய்முறையில் பிஸிபேளாபாத் பொடியில் பொப்பரைத்துறுவல் சேர்க்காதததால் தேங்காய்த்துறுவல்+புளி+பொடி  இவற்றை அரைத்து சேர்க்க வேண்டும்.

நான் சேர்த்திருக்கும் காய்கள் சின்ன வெங்காயம்,சௌ சௌ,கேரட்,கத்திரிக்காய்,நூல்கோல்,முருங்கைக்காய்.

தே.பொருட்கள்
பச்சரிசி- 3/4 கப்
துவரம்பருப்பு- 1/2 கப்
காய்கள்- 1 கப்
வெல்லம்- சிறிது
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
நீர்- 6கப்
உப்பு -தேவைக்கு

அரைக்க‌
தேங்காய்த்துறுவல் -1/2 கப்
புளி -எலுமிச்சை பழளவு
பிஸிபேளாபாத் பொடி -1/4 கப்

தாளிக்க‌
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
நெய் -1 டேபிள்ஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை- 1 கொத்து
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

*குக்கரில் அரிசி+பருப்பினை 6 கப் நீர் +மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

*நறுக்கிய காய்களை பாத்திரத்தில் மூழ்குமளவு நீர் ஊற்றி வேகவைக்கவும்.

*காய் வெந்ததும் அரைத்த விழுது+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


*பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த அரிசி பருப்பு +தேவைக்கு நீர் சேர்த்து கலக்கவும்.

*சிறிது நேரம் கிளறிய பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கவும்.

*சாதம் கொஞ்சம் நீர்த்தாற்போல் இருக்க வேண்டும்.ஆறியதும் கெட்டியாகிவிடும்.

*வறுவல் அல்லது சிப்ஸுடன் சூடாக பரிமாறவும்.

பி.கு

*இதில் அரிசியை தனியாகவும்,ப்ருப்புடன் காய்கள் சேர்த்து தனியாகவும் வேகவைத்து செய்யலாம்.

*இதனை சூடாக  பரிமாறவும்,ஆறியதும் சாதம் கெட்டியாகிவிடும்.
Monday, 2 March 2015 | By: Menaga Sathia

கொண்டைக்கடலை(சன்னா) பிரியாணி / CHANA BIRYANI | BIRYANI RECIPES

print this page PRINT IT
பொதுவாக பிரியாணியை நெய் சேர்த்து செய்வோம்,ஆனால் நான் சொல்லியிருக்கும் இந்த முறையில் செய்தால் நெய் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து செய்யவேண்டியதில்லை.சுவையும் அபாரமாக இருக்கும்.

தேவையெனில் தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்,நான் சேர்க்கவில்லை.

இதில் அரிசியை குறைந்தது 1 மணிநேரம் சரியாக‌ ஊறவைத்து நீரை வடித்து,1 கப் அரிசிக்கு 2 கப் நீர் சேர்த்து செய்ய வேண்டும்.

தம் போடும் க்ரேவியில் கொஞ்சம் கூட நீர் இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.அதன் மேல் ஊறவைத்த அரிசியை சமமாக‌ போட்டு அதன் மீது நீரினை பரவலாக ஊற்றவேண்டும்.

நீர் முழுவதும் வற்றிய பிறகு மிக குறைந்த தீயில் 10 நிமிடங்கள் தம் போடவும்.இப்படி செய்வதால் அடியும் பிடிக்காது,சாதமும் உதிரியாக வரும்.

கிரேவி செய்யும் போதே உப்பின் அளவை கொஞ்சம் கூடுதலாக போடவும்,ஏனென்றால் பிறகு உப்பு சரியாக இருக்கிறதா என நடுவில் பார்க்க முடியாது.

தம் போட்ட பின் 1 முறை கிளறி வைத்த பின் பரிமாறும் போது மட்டும் கிளறி பரிமாறவும்.

நடுநடுவில் கிளற வேண்டாம்,சாதம் உடைந்து போகும்.

நான் 3 கப் அரிசிக்கு 6 கப் நீர் ஊற்றுவதற்கு பதில் மறதியாக 7 கப் நீர் ஊற்றி செய்தேன்,ஆச்சர்யம் சாதம் குழைவாக இல்லாமல் உதிரியாகவே இருந்தது.

இந்த டிப்ஸ்கள் அனைத்தையும் வழங்கிய கீதாவுக்கும்,அவரின் தோழிக்கும் மிக்க நன்றி!!

இப்போழுதெல்லாம் இந்த முறையில் தான் பிரியாணி செய்கிறேன்.

தே.பொருட்கள்

பாஸ்மதி -3 கப்
கொண்டைகடலை- 2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம்- 1 பெரியது
கீறிய பச்சை மிளகாய் -2
புதினா+கொத்தமல்லி தலா- 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு

ஊறவைக்க‌

தயிர்- 1/2 கப்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி -1 டீஸ்பூன்

தாளிக்க‌

பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 4
ஏலக்காய்- 3
பிரியாணி இலை - 2

செய்முறை

*கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து நீரினை அளந்து தனியாக வைக்கவும்.

*ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும்.

*அரிசியை கழுவி சரியாக 1 மணிநேரம் ஊறவைத்து நீரினை வடிக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் வேகவைத்த சன்னா மற்றும் ஊறவைத்த தயிர் கலவை +உப்பு சேர்த்து வதக்கவும்.

*இப்போழுது இந்த கலவை முழுவதும் டிரையாக இருக்க வேண்டும்.அதனை அப்படியே சமமாக பரப்பி விடவும்.

*அதன் மீது ஊறவைத்த அரிசியை சமபடுத்தி விடவும்.

*அதன் மீது சன்னா வேகவைத்த நீரோடு சேர்த்து 6 கப் நீர் ஊற்றவும்.

*புதினா கொத்தமல்லியை தூவி விடவும்.

*நீர் முழுவதும் வற்றிய பிறகு மிக குறைந்த தீயில் தம்மில் 10 நிமிடங்கள் போடவும்.

*தம் போட்ட பின் மெதுவாக கிளறி விட்டு,பரிமாறும் போது 1 முறை கிளறி பரிமாறவும்.

*சாதமும் உடையாமல் உதிரியாக இருக்கும்.

Monday, 12 January 2015 | By: Menaga Sathia

வெஜ் ப்ரைட் ரைஸ்/ Veg Fried Rice | 7 Days Dinner Menu # 7

தே.பொருட்கள்

சாதம் - 2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய கோஸ்+கேரட் -  தலா 1/2 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
வெங்காயத்தாள் - 1
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -  1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்


செய்முறை

* கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காயவைத்து பூண்டுப்பல்+வெங்காயம்+பொடியாக நறுக்கிய வெங்காயத்தாலின் வெள்ளைப்பகுதி சேர்த்து வதக்கவும்.

*பின் பச்சை மிளகாய்+கோஸ்+கேரட்+குடமிளகாய்+சர்க்கரை சேர்த்து 5 - 6 நிமிடங்கள் வரை வதக்கவும்.

*சோயா சாஸ் சேர்த்து நன்கு வதக்கி சாதம்+உப்பு சேர்த்து நன்கு கிளறி மிளகுத்தூள்+வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.

பி.கு

*நான் மூன்று கலர் காய் மட்டுமே சேர்த்து செய்துள்ளேன்.விரும்பினால் சோளம்+பச்சை பட்டாணி+பீன்ஸ் சேர்க்கலாம்.
 
*வெள்ளை மிளகுத்தூள் பதில் கருப்பு மிளகுத்தூள் மற்றும் பச்சை மிளகாய் பதில் சில்லி சாஸ் 1 டீஸ்பூன் சேர்க்கலாம் சாதத்தின் கலர் லேசாக மாறும்.

*காய்களை 5 நிமிடங்கள் வரை வதக்கினால் போதும்,முழுவதும் வேககூடாது.அதிக தீயில் வைத்து செய்யவும்.

Wednesday, 3 December 2014 | By: Menaga Sathia

கூட்டாஞ்சோறு / Kootanchoru | Lunch Box Recipe



print this page PRINT IT
 Recipe Source:சமைத்து அசத்தலாம்

சமைக்கும் நேரம் - 30  நிமிடங்கள்
பரிமாறும் அளவு - 2 நபர்கள்

தே.பொருட்கள்

புழுங்கலரிசி -1/2 கப்
துவரம்பருப்பு -1/8 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
நறுக்கிய காய்கறிகள் - 1 கப்
முருங்கைக்கீரை - 1/2 கப்
புளி - சிறிய எலுமிச்சையளவு
உப்பு -தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் -1 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
சின்ன வெங்காயம் -5

தாளிக்க

எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வடகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

நான் சேர்த்திருக்கும் காய்கள் முருங்கைக்காய்+கேரட்+கத்திரிக்காய்+மாங்காய்+அவரைக்காய்+காராமணிக்காய்

செய்முறை

*அரிசி+பருப்பை கழுவி 2 கப் நீரில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.குக்கரில் ஊறிய அரிசி பருப்பை ஊறவைத்து நீருடன் அடுப்பில் வைத்து மூடி மட்டும் போட்டு சிறு தீயில் வேகவிடவும்.பாதி அளவு வெந்து நீர் வற்றியிருக்கும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை  நைசாக அரைக்கவும்.
*வேறொரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்களை சேர்த்து வதக்கவும்.பின் மஞ்சள்தூள் +உப்பு+கீரை சேர்த்து பிரட்டி அரைத்த மசால் சேர்த்து கொதிக்க விடவும்.

*காய்கள் பாதி வெந்ததும் புளியை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
*வெந்த அரிசி பருப்பில் வேகவைத்த காய்கலவை சேர்த்து மாங்காய்துண்டுகள்+தேவைக்கு உப்பு+மேலும் 1 கப் நீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
*வெயிட் போட்டு  சிறுதீயில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
*பின் மீதமுள்ள‌ எண்ணெய்+நெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து சேர்க்கவும்.


Monday, 10 November 2014 | By: Menaga Sathia

சம்பா சாதம் & சிதம்பரம் கொத்சு / SAMBA SADHAM & CHIDAMBARAM KOTSU | CHIDAMBARAM NADARAJAR KOIL SPL

சம்பா சாதம் + கத்திரிக்காய் கொத்சு இவையிரண்டும் சிதம்பரம் நடராஜர் கோவிலில்  இறைவனுக்கு படைக்கபடும் முக்கிய பிரசாதம்.

சம்பா சாதம் என்பது உதிரியாக வடித்த சாதத்தில் நெய்யில் தாளித்த மிளகுத்தூள்+கறிவேப்பிலை இவைகளை சாதத்தில் போட்டி கிளறி செய்வது.

கத்திரிக்காய் கொத்சு என்பது சிறிய கத்திரிக்காயை நறுக்கி எண்ணெயில் வதக்கி பின் புளிகரைசல்+கொத்சு பொடி சேர்த்து செய்வது.கோவில் தீட்ஷீதர்கள் இதில் வெங்காயம் சேர்க்க மாட்டாங்க.இது கோவிலில் செய்யும் முறை.

சிதம்பரம் சென்றால் உடுப்பி விலாஸ் ஹோட்டல் கொத்சு சாப்பிட யாரும் மறக்காதீங்க,பொங்கல் + இட்லியுடன் சாப்பிட சூப்பர்.

சம்பா சாதத்தில் கொத்சு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் என கேள்விபட்டதோடு சரி.முகநூலில் பானுமதி மாமியிடம் குறிப்பினை கேட்டு செய்தேன்.அதோடு அவர்கள் தொட்டு கொள்ள மசால் வடை சூப்பர்னு சொல்ல நானும் அதே காம்பினேஷனில் செய்தேன் நன்றாக இருந்தது.நன்றி மாமி !!

மாமி சொல்லிய குறிப்பில் வெங்காயம் சேர்க்க சொல்லியிருந்தாங்க.ஆனால் நான் சேர்க்கவில்லை.

நான் செய்திருக்கும் கொத்சு,கத்திரிக்காயை சுட்டு செய்திருக்கேன்,ஆனால் கோவிலில் செய்யும் கொத்சுவில் சிறிய கத்திரிக்காயை எண்ணெயில் வதக்கி செய்வாங்க.

சம்பா சாதம் செய்ய தே.பொருட்கள்

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
ப்ரெஷ் மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கடாயில் நெய் விட்டு மிளகுத்தூள்+கறிவேப்பிலை  சேர்த்து தாலித்து சாதம்+உப்பு சேர்த்து கிளறவும்.


*விரும்பினால் தாளிக்கும் போது முந்திரிப்பருப்பு சேர்க்கலாம்.

சிதம்பரம் கொத்சு

தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் -1
புளிகரைசல் - 1 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க 
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு  - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்சு பொடி செய்ய

காய்ந்த மிளகாய் -2
தனியா - 2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்

செய்முறை
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நல்லென்ணெயில் வறுத்து பொடிக்கவும்.

*கத்திரிக்காயில் எண்ணெய் தடவி அவன் அல்லது அடுப்பில் சுட்டு ஆறியதும் தோலுரித்து நன்கு மசிக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு புளிவாசனை போனதும் மசித்த கத்திரிக்காய்+பொடித்த பொடியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கவும்.

பி.கு
 *வெங்காயம் சேர்க்க விரும்புபவர்கள் சின்ன வெங்காயத்தினை தாளித்த பிறகு சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*இந்த கொத்சு பொங்கல்,இட்லி+அரிசி உப்புமாவுக்கு பெஸ்ட் காம்பினேஷன்.




Wednesday, 24 September 2014 | By: Menaga Sathia

சோயா உருண்டை பிரியாணி /MEAL MAKER(SOYA CHUNKS) BIRYANI | KIDS LUNCH BOX RECIPES


print this page PRINT IT
சோயாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.

தே.பொருட்கள்

சோயா உருண்டைகள் - 1 கப்
பாஸ்மதி - 2 கப்
நீர் - 3 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி - 1
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரைக்க

பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 5
சோம்பு - 1 டீஸ்பூன்
புதினா கொத்தமல்லி  - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 2

தாளிக்க

பட்டை - சிறுதுண்டு
ஏலக்காய் -2
கிராம்பு -2
பிரியாணி இலை -2

செய்முறை

*சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுத்து குளிர்ந்த நீரில் 2-3 தடவை கழுவவும்.

*உருண்டைகள் பெரியதாக இருந்தால் 2ஆக நறுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.

*சோயா உருண்டையில் தயிர்+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+அரைத்த விழுது சிறிதளவு+உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
*குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*பின் தக்காளி சேர்த்து வதக்கிய பின்+மீதமுள்ள அரைத்த விழுதினை சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின் ஊறவைத்த சோய உருண்டையை சேர்த்து 10 நிமிடங்கள் வரை வதக்கவும்.
*உப்பு+3 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*நீர்  கொதிக்கும் போது அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரை வேகவிடவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் நெய் சேர்த்து கிளறி பச்சடி அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

முகநூல் தோழி மகேஸ்வரி அவர்கள் இந்த ஈவெண்டில் கலந்துக்கொள்ளுமாறு சொன்னாங்க. நான் ப்ளாக்கற்ஸ் கூட கலந்துக்கலாம்.மேலும் விபரம் அறிய கீழ்கண்ட லிங்கினை பார்க்கவும்.

Sending to Indusladies Kids lunch box recipes

Monday, 1 September 2014 | By: Menaga Sathia

ஐயங்கார் புளியோதரை / IYENGAR PULIYODARAI | LUNCH BOX RECIPES

 முகநூலில் திரு.ரத்னவேல் ஐயா அவர்கள் அவருடைய பக்கத்தில் இந்த குறிப்பினை பகிர்ந்திருந்தார்.அதனை பார்த்து உடனே செய்தது.அப்படியே பெருமாள் கோவில் பிரசாதம் சாப்பிட்டது போல் இருந்தது.நன்றி ஐயா!!

புளியோதரைக்கு புளிக்காய்ச்சலை முதல்நாள் இரவே செய்துவைக்கவேண்டும்.மறுநாள் காலையில் பாத்திரத்தை திறக்கும் போது கெம்மென்று வாசனை வந்தால் புளிக்காய்ச்சல் சரியாக செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

ஒரிஜினல் ரெசிபியில் முந்திரி சேர்க்க  சொல்லியிருந்தாங்க,நான் அதற்கு பதில் வேர்க்கடலை சேர்த்து செய்தேன்.மேலும் இதில் காரத்திற்கு மிளகினை ப்ரெஷ்ஷாக பொடித்து நல்லெண்ணெயில் குழைத்து சாதத்தில் கலக்கவேண்டும்.

இப்போழுது செய்முறையை பார்க்கலாம்.

தே.பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 3 கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் சாதத்தில் கலக்க
பொடித்த மிளகு - 2 டேபிள்ஸ்பூன்

புளிகாய்ச்சல் செய்ய

கெட்டியான புளிகரைசல் - 1 கப்
நல்லெண்ணெய் - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -சிறிது
வேர்க்கடலை - 1 கைப்பிடி
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு+வெந்தயம்+சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
 *பின் வேர்க்கடலை+மஞ்சள்தூள் சேர்க்கவும்.
 *கெடியான புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
 *பச்சை வாசனை அடங்கி குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
 *மறுநாள் காலையில் சாதத்தை வடித்து ஆறவைத்து நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

*சிறிது புளிகாய்ச்சலை சேர்க்கவும்.
 *பொடித்த மிளகினை சிறிது எண்ணெயில் கலந்து சேர்க்கவும்.நான் அப்படியே மிளகினை சேர்த்து விட்டேன்.
 *அனைத்தையும் ஒன்றாக நன்கு கிளறவும்.
*சுவையான புளிகாய்ச்சல் ரெடி!!
01 09 10